நாடு முழுவதும் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.100க்கு மேல் உயர்வு
மே மாதம் இன்று தொடங்கிய நிலையில், நாடு முழுவதும் வர்த்தகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலின்டரின் விலை ரூ.104 வரை உயர்த்தப்பட்டுள்ளது. எண்ணெய் வர்த்தக நிறுவனங்கள் இந்த விலை உயர்வை அறிவித்துள்ளன. அதேவேளை, வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
இதையடுத்து 19 கிலோ கமர்சியல் சிலின்டரின் விலை தலைநகர் டெல்லியில் ரூ.102.50 உயர்ந்து ரூ.2,355க்கு விற்பனையாகிறது. சென்னையில் 19 கிலோ கமர்சியில் சிலின்டரின் விலை ரூ.102 அதிகரித்து ரூ.2,508க்கு விற்பனை ஆகிறது. மும்பையிலும் விலை ரூ.102 உயர்த்தப்பட்டு, ரூ.2,307க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதிகபட்சமாக கொல்கத்தாவில் விலை ரூ.104 உயர்த்தப்பட்டு, ஒரு சிலின்டர் ரூ.2,455க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே, கடந்த மாதம் ஏப்ரல் 1ஆம் தேதி கமர்சியல் சிலின்டரின் விலை ரூ.268.50 வரை...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment